Friday, January 29, 2010

உரமாகிய மரம்!

வடலிப்பனையெல்லாம் வளர்ந்து பெரிதாகி
திடல் அடர்ந்து நெருக்கம் தெரிகிறது - தலைமுறிந்து
போன பனையெல்லாம் போகமுன்னர் தந்தவிதை
கானகத்தில் விளைந்த கதை!


சாகமுன்னம் நல்லவற்றை தந்திட்டம் எனுமகிழ்வில்
தாகம் இன்னும் சரியாக தணியாமல் - போனாலும்
எச்சம் புதுக்கதைகள் எழுதும் எனநினைப்பை
வைத்திருந்தால் எது வலி?

எங்கு தொடங்கினமோ எதில் போய்ச் சேரணுமோ
தங்கிய இடம் வழிய தரவிருக்கு - கம்பெடுத்து
அடித்து பெறமுடியா அவையெல்லாம் நன்றாக
படித்துப் பெறவேணும் பார்.





செத்ததெல்லாம் உரமாகும் செந்நெல் விதைமுளைத்தால்!
பற்றையெண்டா உரத்தின்ரை பயனெ்ன? - விட்டிடடா
குத்து வெட்டு குழிபறிக்கும் சேட்டைகளை
சத்துறிஞ்சி வாழும் தளிர்!

29 01 2010


1 comment:

Anonymous said...

நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.